Sunday, November 6, 2016

வளர்ச்சித்துறை /  - வினா எண் 28

சிவதி: நானே கேள்வி # நானே பதில் # சிவதி # வளர்ச்சித்துறை /  - வினா எண் 28

கேள்வி - அய்யா தான் ஒரு ஊர் நல அலுவலர். ஒரு கட்டிடப்பணியின் தற்போது நிலையினை கவனிக்க பணிக்கப் பட்டேன். தற்போது அங்கே கட்டிடத்தின் பூச்சு வேலைப்பணி நடை பெற்று வருகிறது. நான் என்ன என்ன  கவனிக்க வேண்டும்?

பதில் - பூச்சுவேலை எனப்படும் plastering பணி கிட்டத்தட்ட கட்டப்பணியின் இறுதி கட்ட நிலை.

கட்டிடத்தின் வெளிப்புற வெப்பம் மற்றும் ஈரத்தன்மையில் இருந்து காப்பாற்றுவது பூச்சு வேலைதான்.

பின்வரும் நடைமுறைகள் பின்பற்றுகிறார்களா என களப்பணியில் உறுதி செய்யுங்கள்

பூச்சு வேலைக்கு முன்பு brick wallஐ நீரால் நன்கு நனைத்திட வேண்டும்.

plastering work சுவற்றின்  மேலிருந்து கீழாக செய்வதே முறையானதாக இருக்கும்.

பூச்சுவேலை முடிக்கப்பட்ட பகுதியை  10 முதல் 12 நாட்கள் தண்ணீரில் நனைக்க வேண்டும்.

சுவற்றிற்கு சிமெண்ட் மணல் கலவை 1;5 என 12 முதல் 15 mmம்

roofன் அடிப்புறம் எனில் 1;3 என 10 mm 12mm கனத்திற்கு பூசவேண்டும்.

இதயெல்லாம் கூட நாம தெரிஞ்சுக்கனம்  RWO Sir...

# சிவதி. TNRDOA 7871336611

No comments:

Post a Comment